பெகாசஸ் உளவு விவகாரம்; வழக்கு - 5ம் தேதி விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
பெகாசஸ் உளவு விவகாரம்; வழக்கு - 5ம் தேதி விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
x
பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் 5ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி, இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உட்பட 40 பேர் தொலைபேசி ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பிலும், பத்திரிகையாளர்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு 5ம் தேதி விசாரிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்