2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் : ஒலிம்பிக்கில் பங்கேற்க கினியா அணி மறுப்பு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என ஆப்பிரிக்க நாடான கினியா அறிவித்து உள்ளது.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் : ஒலிம்பிக்கில் பங்கேற்க கினியா அணி மறுப்பு
x
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என ஆப்பிரிக்க நாடான கினியா அறிவித்து உள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் பன்டாமா சவ், கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், தங்கள் நாட்டு விளையாட்டு வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என தெரிவித்து உள்ளார். இதனிடையே, நிதிப் பற்றாக்குறை காரணமாகவே ஒலிம்பிக்கில் பங்கேற்க கினியா மறுத்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, இந்த முறை 5 வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப இருந்தது, குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்