கனமழை, வெள்ளத்தில் மிதக்கும் மாகாணம் - அவசர கால பணியை துரிதப்படுத்திய சீன அரசு

சீனாவில் கடுமையான வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கிய மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகளில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கனமழை, வெள்ளத்தில் மிதக்கும் மாகாணம் - அவசர கால பணியை துரிதப்படுத்திய சீன அரசு
x
சீனாவில் கடுமையான வெள்ளத்திற்கு மத்தியில் சிக்கிய மெட்ரோ ரயிலில் இருந்த பயணிகளில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை, வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மத்திய சீனாவின் ஹெனான் மாகாணம் தனித்தீவு போல் காட்சி அளிக்கிறது. மஞ்சளாறு மற்றும் ஹைஹே நதியின் கிளை ஆறுகளில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது மெட்ரோ ரயிலில் திடீரென வெள்ளத்தில் சிக்கியதில் 12 பேர் உயிரிழந்தனர். அதீத கனமழையால், ஹெனான் மாகாணத்தில் ரயில், பேருந்து, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அவசர கால பணிகளை சீன அரசு துரிதப்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்