அச்சுறுத்தும் துப்பாக்கி கலாசாரம் - மைதானத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில், 3 பேர் காயம் அடைந்தனர்
. அங்குள்ள பேஸ்பால் விளையாட்டு மைதானத்துக்கு வெளியே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து உள்ளது. இதில், காயம் அடைந்த மூவரும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, துப்பாக்கி சூடு சம்பவத்தால், மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த பேஸ்பால் போட்டி தடைபட்டது.
Next Story