கட்டுக்கடங்காத காட்டுத் தீ - ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்க முயற்சி
அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
அமெரிக்காவின் ஒரிகன் மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். ஒரு வாரத்திற்கும் மேலாக கொழுந்துவிட்டு எரியும் தீயை, கவனிக்காமல் விட்டதன் காரணமாக தற்போது, இரண்டு லட்சத்து 41 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தீக்கு இரையாகியுள்ளன. இது நியூயார்க் நகரின் மொத்த பரப்பரளவை விட அதிகமாகும். ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் கடந்த 4 நாட்களாக ஆயிரத்து 900க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story