பிரேசில் அதிபர் மருத்துவமனையில் அனுமதி
பிரேசில் அதிபர் ஜேய்ர் பொல்சனாரோவுக்கு, சா பவுலோவில் உள்ள மருத்துவமனையில் அவசர குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
பிரேசில் அதிபர் ஜேய்ர் பொல்சனாரோவுக்கு, சா பவுலோவில் உள்ள மருத்துவமனையில் அவசர குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பு, மற்றும் தடுப்பூசி கொள்முதலில் ஊழல் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டில் சர்ச்சை நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்றிலிருந்து மீண்டதில் இருந்தே பொல்சனாரோவுக்கு உடல் நல பாதிப்புகள் இருந்தன. இந்நிலையில், 66 வயதான பொல்சனரோ பிரேசில் இராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நிலையில், நாள்பட்ட விக்கலால் அவதிப்பட்ட அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், உடனடி அறுவை சிகிச்சைக்காக அவர் சா பவுல் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் சென்றடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story