திடீரென அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஒரே நாளில் பாதிப்பு 1,15,228 ஆக உயர்வு!

பிரேசிலில் தினசரி கொரோனா பாதிப்பு திடீரென 1 லட்சத்து 15 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
திடீரென அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஒரே நாளில் பாதிப்பு 1,15,228 ஆக உயர்வு!
x
பிரேசிலில் தினசரி கொரோனா பாதிப்பு திடீரென 1 லட்சத்து 15 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு 1 கோடியே 81 லட்சத்து 69 ஆயிரத்து 881ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 2 ஆயிரத்து 392 ஆகப் பதிவான நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 7 ஆயிரத்து 109 ஆக உயர்ந்துள்ளது. சா பவுலோ மாநிலத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பின் காரணமாக, ஜூலை 15 வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக கொரோனா இறப்பு எண்ணிக்கை பதிவாகும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2ம் இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்