கனடாவைத் தாக்கிய கடும் சூறாவளி- முதியவர் ஒருவர் உயிரிழப்பு
கனடாவின் மாஸ்கூஷ் நகரைத் தாக்கிய கடும் சூறாவளி காரணமாக, ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகள் கடும் சேதமடைந்தன.
கனடாவின் மாஸ்கூஷ் நகரைத் தாக்கிய கடும் சூறாவளி காரணமாக, ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகள் கடும் சேதமடைந்தன. திடீரென்று வீசிய சூறாவளியால் 50க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்ததுடன், சுவர்கள் இடிந்து விழுந்தன. மேலும், மரங்கள் வேருடன் பிடுங்கி எறியப்பட்டன. இதில் 59 வயதான முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது போன்ற சூறாவளியை இதற்கு முன் கண்டதில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
Next Story