துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் - துரத்தி துரத்தி சுட்டதால் பரபரப்பு

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் - துரத்தி துரத்தி சுட்டதால் பரபரப்பு
x
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். நியூயார்க் சாலையில் ஒருவர் தனது குழந்தைகளுடன்  நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த முகமூடி அணிந்த மர்ம நபர், குழந்தைகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். இதனால், அவர்கள் அலறியடித்து தப்பிக்க முயன்றனர். இருப்பினும், மீண்டும் அவர்களை அந்த மர்ம நபர் சுட்டுவிட்டு தப்பி ஓடினார். அதிர்ஷ்டவசமாக, யார் மீதும் குண்டுகள் படாத நிலையில், பார்ப்போரை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்