தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் யானை கூட்டம் - தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர்
சீனாவில் யுனான் மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக இடம்பெயர்ந்து வரும் ஆசிய யானை கூட்டம், தன் பயணத்தை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், யானைகளின் பயணத்தை யுனான் மாகாண வனத்துறையினர், ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யுக்சி நகரத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் யானைகள் அவ்வப்போது தனது பாதையை மாற்றி கொண்டே வருகிறது. இதனிடையே, ஷிஜி டவுனின் அருகில் உள்ள சோளக்காட்டில் புகுந்து பதம் பார்த்து சென்ற யானைகள், போகும் வழி எங்கும் வயல்களை சேதப்படுத்தி உணவு உண்டும், தண்ணீர் குடித்தும், விளையாடி கொண்டும் யானைகள் பயணித்து செல்கின்றன.
Next Story