முள்ளிவாய்க்கால் படுகொலை; மன்னாரில் நினைவேந்தல் அனுசரிப்பு

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தல் மன்னாரிலும் அனுசரிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் படுகொலை; மன்னாரில் நினைவேந்தல் அனுசரிப்பு
x
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தல் மன்னாரிலும் அனுசரிக்கப்பட்டது. முள்ளிவாய்கால் படுகொலையின் 12-வது ஆண்டு நினைவு நாள் இன்று இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள  பல பகுதிகளிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், நினைவேந்தல் காலை 10.15 மணியளவில் மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்றது. அந்த  இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், மத தலைவர்கள், மன்னார் நகர முதல்வர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்