நியூயார்க்கில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு...1 குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,1 குழந்தை மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர்.
நியூயார்க்கில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு...1 குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்
x
நியூயார்க்கில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு...1 குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்
 
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,1 குழந்தை மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து,  உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படனர். மேலும் சுடப்பட்ட மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்திற்குள்ளான 4 வயது குழந்தை அருகிலிருந்த கடையில், பொம்மைகள் வாங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர் காலில் துப்பாக்கியால் சுட்டதால், படுகாயமடைந்த அந்தக் குழந்தைக்குத் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிகப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்