அனைத்து உதவிகளையும் செய்ய தயார் - பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் உறுதி

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை அனுப்ப இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
அனைத்து உதவிகளையும் செய்ய தயார் - பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் உறுதி
x
கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியாவுக்கு தோள் கொடுக்கும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என்றும், அனைத்து உதவிகளை செய்ய இங்கிலாந்து உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 495 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 140 வென்டிலேட்டர்கள் உட்பட 9 விமான கொள்கலன் சுமைகள், இந்த வாரம் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும், வென்டிலேட்டர் செவ்வாய்கிழமை அதிகாலை டெல்லிக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்ஸனின் இந்த வார இந்திய பயணம், கொரோனா பரவலால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்