இந்தியாவிற்கு பயணம்; முழுமையாக தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் - அமெரிக்கா அறிவுறுத்தல்

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், இந்தியாவிற்கு பயணிப்பது தொடர்பாக 4ம் நிலை சுகாதார நோட்டீஸை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இந்தியாவிற்கு பயணம்; முழுமையாக தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம் - அமெரிக்கா அறிவுறுத்தல்
x
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், இந்தியாவிற்கு பயணிப்பது தொடர்பாக 4ம் நிலை சுகாதார நோட்டீஸை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், இந்தியாவிற்கு பயணிக்கும் பயணிகள் கண்டிப்பாக முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள தேவையில்லை என்றும், மீண்டும் அமெரிக்கா திரும்பியதும் தனிமைப்படுத்தி கொள்ள தேவையில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்