இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா - மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்ட நிலையில், பல்வேறு உலக நாடுகளில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில், 2 லட்சத்து 739 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரத்து 38 பேர் வைரசுக்கு பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா - மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ள மக்கள்
x
இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவில், ஒரே நாளில் 78 ஆயிரத்து 439 பேர் வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், தொள்ளாயிரத்து பதினைந்து பேர் உயிரிழந்து உள்ளனர். பிரேசிலில் நேற்று ஒரே நாளில், 75 ஆயிரத்து 998 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 ஆயிரத்து 462 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல், துருக்கியில், கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 797 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 279 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். துருக்கிக்கு அடுத்தபடியாக பிரான்சில் நேற்று ஒரே நாளில் 43 ஆயிரத்து 505 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 297 பேர் உயிரிழந்து உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்