இலங்கை தமிழர்கள்- சித்திரை 1 வழிபாடு : இந்து, சிங்கள கோயில்களில் வழிபாடு

இலங்கையில், கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவே, சித்திரை முதல்நாளை முன்னிட்டு இந்துக் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
இலங்கை தமிழர்கள்- சித்திரை 1 வழிபாடு : இந்து, சிங்கள கோயில்களில் வழிபாடு
x
13ஆம் தேதி மாலை முதலே கோயில்களுக்கு சென்ற அவர்கள், சித்திரை முதல் நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும், இந்துக் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொரோனா பெருந்தொற்று நீங்கவும், தமிழர்களின் வாழ்வு வளம் பெற, சகோதரத்துவம் ஓங்க, வேண்டிக்கொண்டதாக பக்தர்கள் தெரிவித்தனர். பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக இருந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சிங்கள புத்தாண்டு தொடக்கத்தின் குறியீடாக இருப்பதால், நேற்று புத்தக் கோயில்களிலும் வழிபாடு நடத்தப்பட்டது. இதனிடையே, 95 ஆயிரத்து 602 தொற்றுப் பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்