இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.
இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது
x
பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது.இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.‌ அவருக்கு பிரிட்டனில் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் அஞ்சலி செல்த்தி வருகின்றனர். லண்டனில் கிங்ஸ் ராயல் குதிரை பீரங்கிப் படையினர் துப்பாக்கி குண்டுகளை வெடித்து மரியாதை செலுத்ததினர். இந்நிலையில் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி விண்டசர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இறுதிச் சடங்கில் பொதுமக்கள் கலந்துக்கொள்ள அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச குடும்பத்தினர், அதிகாரிகள் என 30 பேர் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்துக் கொள்வார்கள் என்றும் இறுதி சடங்கு காட்சிகள் தொலைக்காட்சியில் ஒலிபரப்பு செய்யப்படும் என்றும் நாடு முழுவதும் மாலை 3 மணிக்கு ஒருநிமிட மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்