உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல்

இந்தியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல்
x
இந்தியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில், ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 269 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 631 பேர் வைரசுக்கு பலியாகி உள்ளனர்.  இந்தியாவைத் தொடர்ந்து பிரேசிலில், ஒரே நாளில் 82 ஆயிரத்து 869 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு, 4 ஆயிரத்து 211 பேர் உயிரிழந்து உள்ளனர். 1அமெரிக்காவில், நேற்று ஒரே நாளில், 62 ஆயிரத்து 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு ஒரே நாளில் 906 பேர் உயிரிழந்து உள்ளனர். இதேபோல், துருக்கியில் ஒரே நாளில் 49 ஆயிரத்து 584 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 211 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதேபோல், அர்ஜெண்டினாவில் நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 870 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 163 பேர் உயிரிழந்து உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்