பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோம் - மோடியிடம் வலியுறுத்திய ஜோ பைடன்

கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து போராடும் என அமெரிக்க அதிபர் பைடன் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவோம் - மோடியிடம் வலியுறுத்திய ஜோ பைடன்
x
கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து போராடும் என அமெரிக்க அதிபர் பைடன் பிரதமர் மோடியிடம்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ​வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பருவநிலை மாற்றம் தொடர்பாக இருநாடுகளும் நட்புறவை புதுப்பித்துக்கொள்ளுதல், இருநாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைத்தல்,  சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படுதல் ஆகியவை குறித்தும் பேசப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்