இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் - இலவசமாக வழங்கி இந்தியா உதவிக்கரம்

இந்திய அரசு நன்கொடையாக வழங்கியுள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கை அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகின்றன.
இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் - இலவசமாக வழங்கி இந்தியா உதவிக்கரம்
x
இந்திய அரசு நன்கொடையாக வழங்கியுள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கை அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசிகளை நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகளை இந்திய அரசு வழங்கியுள்ளது. இவை சிறப்பு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதனை இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் எனவும் இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்