பாகிஸ்தானில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்...சிந்து மாகாணத்தில் மக்கள் போராட்டம்

பாகிஸ்தானில் இருந்து விடுதலை வேண்டும் என சிந்து மாகாணத்தில் பேரணி நடத்தப்பட்டு உள்ளது.
பாகிஸ்தானில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்...சிந்து மாகாணத்தில் மக்கள் போராட்டம்
x
சான் டவுனில் நடைபெற்ற பேரணியில் இந்திய பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளின் புகைப்படம் தாங்கிய போஸ்டர்களை மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். உலக நாடுகள் தலையிட வேண்டும் என்றும் விடுதலை வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.  எங்களுடைய தாய் நாடான சிந்து ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு 1947-ல் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்