நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புது உச்சம் தொட்டு வருகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா - ஒரே நாளில் 55 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
x
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புது உச்சம் தொட்டு வருகிறது. பிரிட்டனில் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 940 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஒரே நாளில் 563 பேர் உயிரிழந்ததை அடுத்து மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 431 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 லட்சத்து 72 ஆயிரத்து 349 ஆக உயர்ந்து உள்ளது. இங்கிலாந்தில் மக்களுக்கு நாள்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்படும் நிலையில், ஊரடங்கை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்