பிரபாகரன் இறப்பு குறித்து விமர்சனம் - தரம் தாழ்ந்து விமர்சித்த இலங்கை அதிபர்
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கடுமையான விமர்சித்துள்ளார்
இலங்கை அம்பாறையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கோத்தபய ராஜபக்ச , தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தன்னை கொல்ல பிரபாகரன் வெடிகுண்டு வைத்ததாக கூறினார். இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்ட பின் அவரை நாயைபோல முள்ளிவாய்காலில் இருந்து பிணமாக கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். முந்தைய ஆட்சி போல நீதித்துறையின் செயற்பாடுகளில் குறிக்கிடவும், அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவும் தான் தயாரில்லை என்றும் கோத்தபய ராஜபக்ச கூறினார்.
Next Story