ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைக்குழு - மூன்று குழுக்களுக்கு இந்தியா தலைமை தாங்குகிறது : இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தகவல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 3 முக்கிய குழுக்களுக்கு இந்தியா தலைமை தாங்கவுள்ளது என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி கூறியுள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடைக்குழு - மூன்று குழுக்களுக்கு இந்தியா தலைமை தாங்குகிறது : இந்தியாவின் நிரந்தர தூதர் திருமூர்த்தி தகவல்
x
அதன்படி, தலிபான் தடை குழு, பயங்கரவாத எதிர்ப்புக் குழு மற்றும் லிபியா தடைகள் குழுவுக்கு இந்தியா தலைமை ஏற்க இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை மனதில் வைத்து முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். லிபியா மீது உலக நாடுகள் கவனம் செலுத்தும் முக்கியமான கட்டத்தில் லிபியா தடைகள் குழுவுக்கு தலைமை பெறுப்பை ஏற்க உள்ளோம் எனக்  திருமூர்த்தி கூறியிருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்