இன்னொரு மரண நோய்! 2020ல் கொரோனா - 2021ல் டிசீஸ் எக்ஸ்?

கொரோனாவின் கோரதாண்டவமே இன்னும் முடியாத நிலையில்... அதைவிட வேகமாகப் பரவும் மற்றொரு நோய்த் தொற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்... அடுத்தடுத்து நோய் கிருமிகள் மனித குலத்தைத் தாக்கக் காரணம் என்ன?
இன்னொரு மரண நோய்! 2020ல் கொரோனா - 2021ல் டிசீஸ் எக்ஸ்?
x
கடந்த சில நூற்றாண்டுகளில் மனித இனம் கண்டிராத பேரழிவை கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கிறது. லாக்டவுன், தடுப்பூசிகள் என உலக நாடுகள் எவ்வளவோ முயன்றும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அதன் அடுத்த ஆட்டத்தைத் தொடங்க உள்ள நிலையில், அதை விட ஆபத்தான மற்றொரு வைரஸ் உலகம் முழுவதும் பரவ உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அந்த வைரசுக்கு இப்போதைக்கு டிசீஸ் எக்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளனர். புதிதாக ஒரு வைரஸ்சை கண்டுபிடித்ததும் அதற்கு டிசீஸ் எக்ஸ் என்றே முதலில் பெயர் சூட்டுவார்கள். அதன் பிறகே அது எந்த குடும்பத்தை சேர்ந்தது என்பதை ஆராய்ந்து அதற்கு உரிய பெயரை அறிவிப்பார்கள். கொரோனாவிற்கும் தொடக்கத்தில் டிசீஸ் எக்ஸ் என்றே பெயர் வைத்திருக்கிறார்கள்.

காங்கோவில் ஒரு பெண்ணுக்கு காய்ச்சலும் வயிற்றுப் போக்கும் ஏற்பட்டிருக்கிறது. சாதாரண சிகிச்சை முறைகளுக்கு அது கட்டுபடதா நிலையில் சந்தேகமடைந்த ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரசாக இருக்காலாம் என்று பரிசோதனை செய்திருக்கிறார்கள். பரிசோதனை முடிவில், எபோலா வைரஸ் தொற்று இல்லை என்று வந்ததை அடுத்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். காரணம், புதிதாக உலகிற்கு வந்திருக்கும் கொடிய வைரசாக அது இருக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

1976 ஆம் ஆண்டு எபோலா வைரஸ்சை கண்டுபிடிக்க உதவிய பேராசிரியர் ஜான் ழாக் முயம்பே தான், தற்போது டிசீஸ் எக்ஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறியிருக்கிறார். எப்போதும் இல்லாத வகையில் மனித குலம், தற்போது புதிய புதிய வைரஸ்களின் தாக்குதலுக்கு ஆளாகி வரும் சூழலில் இருப்பதால், டிசீஸ் எக்ஸ் கொரோனாவை விட கொடூரமானதாக இருக்கும் என்று முயம்பே பீதியைக் கிளப்புகிறார்...

இந்த கிரகத்தில் 1.67 மில்லியன் அறியப்படாத வைரஸ்கள் இருக்கிறது. அதில் தற்போது வரை, 236 வைரஸ்கள் மனிதனைத் தாக்கும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். கிட்டதட்ட 99.9% வைரஸ் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. அவை செயல்படாத நிலையில் இருக்கிறது. மனித குலம் ஏற்படுத்தியிருக்கும் பருவநிலை மாற்றங்களினால் அவை கொஞ்சம் கொஞ்சமாக தற்போது வெளிவரத் தொடங்கியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

காடுகளை அழிப்பதால், மனித வசிப்பிடங்களை நோக்கி வரும், வன விலங்குகள் மற்றும் பறவைகளிடமிருந்து நோய்த் தொற்றுகள் மனிதர்களுக்கு  பரவுகின்றது... பிளேக் தொடங்கி கொரோனா வரை இது தான் நடந்திருக்கிறது. இயற்கை பேரழகானது தான் ஆனால் அதன் சமநிலையை மனித இனம் குலைக்கும் போது, அதற்குள் மறைந்து கிடக்கும் கொடிய ஆயுதங்கள், பேரழிவை ஏற்படுத்த வல்லவை என்பதை இயற்கை தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருக்கிறது...

சுற்றுச் சூழலை காப்போம், மனித இனத்தை மீட்போம்...

Next Story

மேலும் செய்திகள்