அதிபர் பதவியை டிரம்ப் துஷ்பிரயோகம் செய்துள்ளார் - கமலா ஹாரிஸ் அதிரடி பேச்சு
அமெரிக்க அதிபர் டிரம்ப், மற்றும் ஜார்ஜியா மாகாண தலைவர் பிராட்போர்ட் ஜே இடையிலான தொலைபேசி பேச்சு விரக்தியின் குரல் என்று துணை அதிபர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்து உள்ளார்.
பாரம்பரிய அந்தஸ்து மிக்க ஜார்ஜியா மாகாணத்தில் புதிய அதிபர் பைடன் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து அதுகுறித்து ஆய்வு செய்ய மாகாண தலைவர் பிராட்போர்ட் ஜேவுடன் அதிபர் டிரம்ப் செல்போனில் தொடர்பு கொண்டு 1 மணி நேரம் பேசியுள்ளார். இது தற்போது அமெரிக்க அரசியல் வரலாற்றில் புது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஜார்ஜியா மாகாண செனட் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமலா ஹாரிஸ், தேர்தலில் வெற்றி பெற அதிபர் பதவியை டிரம்ப் துஷ்பிரயோகம் செய்து இருப்பதாகவும், அதன் மனக்குமுறல் தான் அந்த பேச்சுவார்த்தை என்று கூறியுள்ளார்.
Next Story