தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவருக்கு சிகிச்சை - காரணம் குறித்து ஆய்வு செய்வதாக மெக்சிக்கோ தகவல்

மெக்சிக்கோவில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மருத்துவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவருக்கு சிகிச்சை - காரணம் குறித்து ஆய்வு செய்வதாக மெக்சிக்கோ தகவல்
x
மெக்சிக்கோவில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மருத்துவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். நியூவோ லயன் பகுதியை சேர்ந்த அந்த மருத்துவருக்கு வலியும், மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து வருவதாக மெக்சிக்கோ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மூளை மற்றும் முதுகெலும்பு அழற்சி நோய்க்கான அறிகுறியாக உள்ளது என்றும் மருத்துவருக்கு ஏற்கனவே அழற்சி இருந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்