இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - புயல் அபாயத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை -  புயல் அபாயத்தால் ரெட் அலர்ட் எச்சரிக்கை
x
அம்பாறை மாவட்டம் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை வீசிவருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனா அச்சுறுத்தலால் பொதுமக்கள் பாதிப்புள்ளாகி இருக்கும் நிலையில், பலத்த மழையால் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கிழக்கு மாகாணத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தையும் இன்று முதல், வெள்ளிக்கிழமை வரை மூடி வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்