அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: "அடுத்த வாரத்துக்குள் மறு வாக்கு எண்ணிக்கை முடியும்" - ஜார்ஜியா தேர்தல் அதிகாரி தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்படும் என்று ஜார்ஜியா மாகாணம் அறிவித்துள்ள நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை அடுத்த வாரத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும் என்று ஜார்ஜியா மாகாண தேர்தல் அதிகாரி கேப்ரியல் ஸ்டெர்லிங் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: அடுத்த வாரத்துக்குள் மறு வாக்கு எண்ணிக்கை முடியும் - ஜார்ஜியா தேர்தல் அதிகாரி தகவல்
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்படும் என்று ஜார்ஜியா மாகாணம் அறிவித்துள்ள நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை அடுத்த வாரத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும் என்று ஜார்ஜியா மாகாண தேர்தல் அதிகாரி கேப்ரியல் ஸ்டெர்லிங் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அட்லாண்டாவில் பேசிய அவர், ஜோ பைடன் மற்றும் டிரம்ப் இடையே 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருப்பதாகவும், டிரம்பின் வலியுறுத்தலால் மீண்டும் வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் கூறினார்.

சவுதி அரேபிய கல்லறைத் தோட்ட குண்டுவெடிப்பு - ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

சவுதி அரேபிய கல்லறைத் தோட்ட குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. முதலாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்கு, ஜெத்தா நகரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், நினைவு தினம் அனுசரிக்கப்பட்டபோது, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பலர் காயமடைந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு தற்போது ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள், குண்டு வெடிப்பை தாங்கள்தான் நிகழ்த்தியதாக கூறி உள்ளனர்.

ராணுவ வீரர்களுக்காக ரத்த தான முகாம் - ரத்தம் அளிக்க மக்கள் ஆர்வம்

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில், காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ரத்தம் அளிப்பதற்காக அந்நாட்டு அரசு ரத்த தான முகாமை தொடங்கி உள்ளது. எத்தியோப்பிய அரசுக்கும், அந்நாட்டின் திஹாரி விடுதலை முன்னணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், ஏராளமான ராணுவ வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு ரத்தம் அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ரத்த தான முகாம்களில்,  மக்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து செல்கின்றனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் பிலிப்பைன்ஸ் - வேம்கோ புயலால் கனமழை, வெள்ளம்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை, வேம்கோ புயல் தாக்கிய நிலையில், அங்கு பெய்த கன மழையால், தலைநகர் மணிலாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மணிலாவின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தால், ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில், மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 7 பேர், பிலிப்பைன்ஸில் உயிரிழந்து உள்ளனர். 

'சோஃபியா ஓபன்' டென்னிஸ் தொடர் -டென்னிஸ் மட்டையை சேதப்படுத்திய வீரர்

பல்கேரியாவில் சோஃபியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்துவரும் நிலையில், உலகின் 12-ஆம் நிலை வீரர் டெனிஸ் ஷபோவலோவ், போட்டியில் தோல்வி அடைந்ததால், தன்னுடைய டென்னிஸ் மட்டையை சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில், மல்டோவிய வீரர் ரடு அல்பட்டிடம், ஷபோவலோவ் 2-க்கு 6, 4-க்கு 6 என்று நேர் செட்களில் தோல்வி அடைந்தார். அப்போது, தோல்வி அடைந்த ஆத்திரத்தில், அவர் தன்னுடைய டென்னிஸ் மட்டையை வேகமாக மைதானத்தின் தரையில் அடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்