ஒலிம்பிக் போட்டிகான டிக்கெட் ரீஃபண்ட் - திரும்பி தர ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் முடிவு

ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் தொகையை திரும்ப பெற ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகான டிக்கெட் ரீஃபண்ட் - திரும்பி தர ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் முடிவு
x
ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் தொகையை திரும்ப பெற ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு டிக்கெட் பெற்றவர்களுக்கான தொகையை திரும்ப தர ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து வரும் நவம்பர் 10-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் தொகையை திரும்ப பெறவும், டிசம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை பாரா ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் தொகையை திரும்ப பெறவும் ஜப்பான் ஒலிம்பிக் சங்கம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.    

Next Story

மேலும் செய்திகள்