ஹங்கேரியில் மனைவியை தோளில் தூக்கியபடி ஓட்டப்பந்தயம்
மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் மனைவியை தூக்கிக் கொண்டு கணவர் ஓடும் பந்தயம் நடைபெற்றது.
மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில், மனைவியை தூக்கிக் கொண்டு கணவர் ஓடும் பந்தயம் நடைபெற்றது. இதில், மனைவியை தோளில் சுமந்தபடி 260 மீட்டர் தூரம் நிலம் மற்றும் சேற்றில் ஓட வேண்டும். இரண்டு சுற்றுகளாக நடந்த இந்த பந்தயத்தின், இறுதிபோட்டியில் 4 ஜோடிகள் கலந்துக்கொண்டன. இதில், டேனியல் கோவாக்ஸ், ஆட்ரியன் ஆக்ஸ் தம்பதி முதல் பரிசை தட்டி சென்றது.
Next Story