கலிஃபோர்னியாவில் உருவாகியுள்ள புதிய காட்டுத் தீ - தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் உருவான காட்டுத் தீக்கு கிளாஸ் பையர் என பெயரிடப்பட்டு உள்ளது.
கலிஃபோர்னியாவில் உருவாகியுள்ள புதிய காட்டுத் தீ - தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தீவிரம்
x
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வார இறுதியில் உருவான காட்டுத் தீக்கு கிளாஸ் பையர் என பெயரிடப்பட்டு உள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியுள்ள இந்த காட்டுத் தீ பரவலை அடுத்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அப்பகுதி மக்களுக்கு நாகா கிராம நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த தீ மிகவும் வேகமாக அழிவை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக தெரிவித்துள்ள கலிஃபோர்னியா தீயணைப்புத் துறையினர், தீ பரவலை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர். குறைந்த ஈரப்பதம் மற்றும் அப்பகுதியில் வீசி வரும் காற்றும் இந்த தீ பரவலுக்கு காரணம் என கூறப்படுகிறது. 

பெலாரஸ் அதிபர் பதவி விலகக்கோரி போராட்டம் தீவிரம் - போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர்  பேர் கைது 

பெலாரஸ் அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், இதில் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை அதிபராக  லுகாஷென்கோ எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பதவியேற்றது அங்கு பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்துள்ளது. தேர்தலில் முறைகேடு ஏதும் செய்யவில்லை என அதிபராக பொறுப்பேற்றுள்ள 
லுகாஷென்கோ விளக்கம் அளித்த நிலையிலும் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மட்டும், 200 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக பெலாரஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கோமல், மின்ஸ்க் உள்ளிட்ட நகரங்களில் 7-வது வாரமாக போராட்டம் தொடரும் நிலையில், போராட்டக்காரர்களை, கலவர தடுப்பு போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். 


டிக்டாக் செயலி தொடர்பான வழக்கில் கொலம்பியா நீதிமன்றம் அதிரடி

அதிபர் தேர்தலை தொடர்ந்து டிக்டாக் செயலிக்கு, டிரம்ப் அரசு விதித்த தடை தொடர்பான வழக்கில், டிரம்ப் அரசின் உத்தரவை தள்ளிவைத்து கொலம்பியா மாவட்ட நீதிபதி கார்ல் நிக்கோல்ஸ் உத்தரவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது டிக்டாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டிரம்ப் அரசின் நிர்வாக உத்தரவு வணிகம் தொடர்பான முதல் திருத்த உரிமைகள் மற்றும் வணிகத்திற்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளையும் என வாதிட்டார். மேலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார். நவீன காலத்தின் நகர சதுக்கம் போன்றது தான் டிக் டாக் செயலி என்றும், பொது மன்றத்தின் கதவுகளை பூட்டுவதும், நகர சதுக்கத்தை அகற்றுவதும் ஒன்று தான் என டிக்டாக் செயலி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் ஹால் வாதிட்டார்.

ஸ்பெயின் தீவில் பரவிய காட்டுத் தீ...கட்டுக்குள் கொண்டு வர உதவிய மழை

ஸ்பெயின் தீவான மல்லோர்காவில் உள்ள இயற்கை பூங்காவான எஸ்'அல்பூபெரா டி அல்குடியாவில் ஏற்பட்ட பயங்கர தீயை, வீரர்கள் நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆயிரத்து 82 ஏக்கர் நிலத்தில், 438 ஏக்கர் நிலம் முற்றிலும் தீயில் எரிந்து சேதமானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பற்றிய தீ, பலத்த காற்றால்  வேகமாக பரவியதால் இந்த இழப்பு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் உதவி உடன் நேற்று மாலை வரை பணிகள் நடைபெற்ற நிலையில், நள்ளிரவு பெய்த மழையால் தீ கட்டுக்குள் வந்துள்ளது.








Next Story

மேலும் செய்திகள்