வலதுசாரிகள் மறைமுகமாக கொலை செய்தன - சிறீசேன

தனது ஆட்சி காலத்தில் வலதுசாரிகள் தம்மை மறைமுகமாக கொலை செய்ததாக முன்னாள் அதிபரும், தற்போதைய எம்.பி.யுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வலதுசாரிகள் மறைமுகமாக கொலை செய்தன - சிறீசேன
x
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 61-வது ஆண்டு நிறைவு விழா கொழும்பு காலி வீதியில் உள்ள தலைமையகத்தில், கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியில் இருந்து ஆரம்பமாகிய கட்சியின் நிறுவனரும், பிரதமராக இருந்தவருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் உருவச் சிலைக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறீசேன, உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் நிகழ்வில் உரையாற்றிய சிறிசேன, ஆட்சிக் காலத்தின் சவால்களை பகிர்ந்தார். பண்டாரநாயக்கவின் உடன் இருந்தவர்களை அவரை சுட்டுக்கொன்றதாக கூறிய சிறீசேன, தம்மையும்  ஆட்சிக் காலத்தில் சுட்டுக்கொல்லாத வலதுசாரி அரசியல் சக்திகள் மறைமுகமாக கொலை செய்தார்கள் என்றார். எவ்வகையான விமர்சனங்களும் தனக்கு பழக்கமானவை என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்