சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பெருட்களை,இறக்குமதி செய்வதை தடை செய்யும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபை நிறைவேற்றியுள்ளது.
சீனாவில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் இறக்குமதிக்கு  தடை - அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையில் மசோதா நிறைவேற்றம்
x
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெருவாரியாக வசிக்கும் உய்குர் இன மக்களை சீன அரசு கடும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கி, அடிமைகளைப் போல நடத்தி, அங்கு உள்ள சீன தொழிற்சாலைகளில் கட்டாயபடுத்தி பணியாற்ற வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை தடுக்கும் நோக்கத்தில் இந்த  மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 406 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் பதிவாகியுள்ளன. கட்சி வேறுபாடின்றி, இந்த மசோதாவிற்கு பெருவாரியான ஆதரவு ஏற்பட்டுள்ளது குறிபிடத்தக்கது. அந்த மாகாணத்தில் இப்படி கொத்தடிமை முறையில் 
தயாரிக்கப்படும் பண்டங்கள் அமெரிக்காவிற்கு பெரிய அளவில் வந்து சேர்வது மிகவும் வருத்தத்துக்குரியது என்று கீழ் சபையின் சபாநாயகர் நேன்சி பெலோசி, வாக்கெடுப்பிற்கு முன்பு கூறியிருந்தார். சீன அரசுக்கு நாம் ஒரு தெளிவான செய்தியை இதன் மூலம் அனுப்ப வேண்டும், இந்த மனித உரிமை மீறல்களை சீனா உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். 

அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி - சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகள் நீக்கம்

அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்யும் விதமாக சீனாவிலிருந்து இயங்கிய 150 போலி கணக்குகளை நீக்கியதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை ஆதரிக்கும் விதமாகவும், எதிர்க்கும் விதமாகவும் இந்த கணக்குகளில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே பிரச்சினையில் 6 இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நவம்பரில் நடைபெற இருக்கும் அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொண்ட நடவடிக்கை முதல்முறையாக வெளிப்படையாக தெரியவந்து இருக்கிறது. 

குடியரசு கட்சியை சேர்ந்த சிண்டி மெக்கைன்  ஜோ பிடனுக்கு ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடனுக்கு, முன்னாள்அதிபர் ஒபாமாவுடன், போட்டியிட்டு தோல்வியடைந்த ஜான் மெக்கைனின் மனைவி சிண்டி மெக்கைன் ஆதரவு தெரிவித்துள்ளார். 

இது குறித்து சிண்டி மெக்கைன் தமது டிவிட்டர் பதிவில், தாங்கள் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், ஆனால், நாட்டிற்கு உரிய கொள்கைகளை முன்னெடுக்கும் ஒரே வேட்பாளார் ஜோ பிடன் தான் என புகழாரம் சூட்டியுள்ளார். கட்சி வேறுபாடுகளை மீறி, ஜோ பிடனும், ஜான் மெக்கைனும் குடும்ப அளவில் நண்பர்களாக இருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். சிண்டி மெக்கைனின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த ஜோ பிடன், இது தனக்கு கிடைத்த பெருமை என்றார். அரிசோனா மாநிலத்தில் இருந்து 30 ஆண்டுகளாக அமெரிக்க செனட் உறுப்பினராக தெர்ந்தெடுக்கப் பட்ட ஜான் மெக்கைனின் மனைவி மற்றும் ஆதரவாளர்கள், ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இந்த மாநிலத்தில் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. சென்ற தேர்தலில் இந்த மாநிலத்தில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். 


ரஷ்ய தலைவர் நவால்னி உடல்நிலையில் முன்னேற்றம் - பெர்லின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த மாத இறுதியில் பெர்லின் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் 32 நாட்களுக்கு பின்னர் சகஜ நிலைக்கு திரும்பி தன் குடும்பத்தினருடன் இனைந்துள்ளார். நரம்பு மண்டலத்தை தாக்கும் ரசாயன மருந்தால் நவால்னியை கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு சர்ச்சை கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சகஜ நிலைக்கு திரும்பி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது ஆதரவாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.   




Next Story

மேலும் செய்திகள்