எல்லையில் பதற்றத்தை தணிக்க இன்று பேச்சுவார்த்தை- சீன ராணுவ அதிகாரிகள் சந்திப்பு
இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இன்று 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது.
இந்திய சீன எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில் இன்று 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு சீன பகுதியில் உள்ள மால்டோ எனும் இடத்தில் இந்த பேச்சு வாா்த்தை நடைபெறுகிறது. ராணுவ துணை தலைமை தளபதி ஹரீந்தா் சிங், சீன ராணுவ மேஜா் ஜெனரல் லியு லின் ஆகியோரின் தலைமையில் பேச்சு வாா்த்தை நடைபெறவுள்ளது. வெளியுறவு அமைச்சகத்தில் கிழக்கு ஆசிய விவகாரங்களை கவனித்து வரும் இணைச் செயலா் நவீன் ஸ்ரீவத்சவா இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
Next Story