டிக்டாக் நிறுவனம் - அதிபர் டிரம்ப் புதிய தகவல்

வரும் 20 ஆம் தேதிக்குள் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால் டிக்டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படுவதற்காக நிர்வாக உத்தரவை கடந்த மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்திருந்தார்.
டிக்டாக் நிறுவனம் - அதிபர் டிரம்ப் புதிய தகவல்
x
வரும் 20 ஆம் தேதிக்குள் டிக்டாக் நிறுவனத்தை, அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால், டிக்டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படுவதற்காக நிர்வாக உத்தரவை கடந்த மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்திருந்தார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஆரக்கிள் நிறுவனம் இந்த விவகாரத்தில் இறுதி நிலையை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விரைவில் ஒப்பந்தம் இறுதியாகும் என தெரிவித்துள்ள டிரம்ப், ஆரக்கிள் நிறுவன தலைவர் லாரே எலிசனின் மிகப்பெரிய ரசிகன் தாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்