குற்றவாளியை தூக்கிலிடக் கோரி பாகிஸ்தானில் போராட்டம் - குற்றவாளியை கைது செய்ய விரைந்தது தனிப்படை

பாகிஸ்தானில் சாலையில் குழந்தைகள் முன்பு, தாயை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குற்றவாளியை தூக்கிலிடக் கோரி  பாகிஸ்தானில் போராட்டம் - குற்றவாளியை கைது செய்ய விரைந்தது தனிப்படை
x
பாகிஸ்தானில் சாலையில் குழந்தைகள் முன்பு, தாயை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கண்டறியப்பட்டு உள்ளதாக, அந்நாட்டு பிரதமரின் சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார். குஜ்ஜார்பூரா என்னும் இடத்தில் கார் பழுதான நிலையில், உதவிக்காக காத்திருந்த போது அந்த பெண்ணுக்கு இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. பாலியல் வன்முறை செய்யப்பட்டதை, மருத்துவக் குழு உறுதி செய்துள்ள நிலையில், குற்றவாளி என கண்டறியப்பட்டு உள்ள பஹவல்நகரின் கோட்டை அப்பாஸ் பகுதியை சேர்ந்த 27 வயதான அபித் அலியை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளது. குறுகிய நேரத்தில் குற்றவாளியை கண்டறிந்த பஞ்சாப் முதலமைச்சர், டி.ஜி.பி. மற்றும் லாகூர் காவல் ஆணையருக்கு பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்