ஈராக்கில் இருந்து 2,200 ராணுவ வீரர்களை திருப்பி அழைத்தது அமெரிக்கா

ஈராக்கில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களில், 2 ஆயிரத்து 200 பேரை அமெரிக்கா தன் நாட்டிற்கு திரும்ப அழைத்துள்ளது.
ஈராக்கில் இருந்து 2,200 ராணுவ வீரர்களை திருப்பி அழைத்தது அமெரிக்கா
x
ஈராக்கில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வீரர்களில், 2 ஆயிரத்து 200 பேரை அமெரிக்கா தன் நாட்டிற்கு திரும்ப அழைத்துள்ளது. ஈராக்கில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக 5 ஆயிரத்து 200 ராணுவ வீரரக்ளை அமெரிக்கா அனுப்பியிருந்தது. தற்போதைய சூழலில் அந்த பணியை ஈராக் ராணுவமே செய்ய முடியும் என்று நம்புவதால், முதல் கட்டமாக 2 ஆயிரத்து 200 வீரர்களை திரும்ப அழைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. வரும் காலத்தில் படிப்படியாக மற்ற வீரர்களும் திரும்ப அழைக்கப்படுவார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்