கருப்பின நபர் மீது போலீசார் துப்பாக்​கிச் சூடு - போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், விதியை மீறியதாக கூறி கருப்பின நபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பின நபர் மீது போலீசார் துப்பாக்​கிச் சூடு - போக்குவரத்து விதிகளை மீறியதாக புகார்
x
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், விதியை மீறியதாக கூறி கருப்பின நபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கிஸி என்ற கருப்பின நபர் சைக்கிள்களுக்கு உரிய இடத்தில் அதனை செலுத்தாமல், வேறு பாதையில் ஓட்டிச் சென்றுள்ளார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்த முயற்சித்த நிலையில் கிஸி, அதனை மீறி  சென்றதால், சுடப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. கருப்பின நபரான கிஸி மீது போலீசார், 20 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன. ஃப்ளோயிட் மரணத்திற்கு பிறகு, அங்கு மீண்டும் ஒரு கருப்பின நபர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டதால், பதற்றம் அதிகரித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்