பொது தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பாவச் செயல் - ரணில் விக்ரமசிங்க

பொது தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பாவச் செயலாகும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொது தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பாவச் செயல் - ரணில் விக்ரமசிங்க
x
பொது தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது பாவச் செயலாகும் என ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு மீகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாம் இன்று எதிர்க்காலம் தொடர்பாக அச்சமடைந்து உள்ளோம் என்றும், எந்தவொரு நம்பிக்கையும் இல்லாதவர்களாக தான் மக்கள் காணப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் வருவாய் மூன்றில் ஒரு பங்காக சுருங்கி உள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டும் தான் இந்த சவாலை வெற்றிக் கொள்ள முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  புதிய கட்சியை ஸ்தாபிப்பது முக்கியமல்ல என்றும், மக்களுக்கு புதிய வாழ்க்கையை வழங்க வேண்டும் என்பது தான் முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்