விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - உலக சுகாதார அமைப்பு தகவல்

கொரோனா தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என உலக சுகாதார அமைப்பின் அவசர கால திட்ட தலைவர் மைக்கெல் ரயான் தெரிவித்துள்ளார்.
விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - உலக சுகாதார அமைப்பு தகவல்
x
ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், தற்போதைய சூழலை பார்க்கும் போது எதிர்வரும் காலத்தில் பழைய இயல்பு நிலையை காண்பது மிக கடினம் என கூறினார். ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தவும் , உயிர்களை காப்பாற்றி வாழ்க்கையை தொடரவும் சில வழிகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். இதே நிகழ்வில் பேசிய மைக்கெல் ரயான் , தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தற்போது பல நாடுகளில் உயிரிழப்புகள் குறைந்து இருப்பதாகவும் கூறினார்,.  


Next Story

மேலும் செய்திகள்