முக கவசம் அணியாமல் வலம் வந்த பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு நடவடிக்கைக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தவர், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனா.
முக கவசம் அணியாமல் வலம் வந்த பிரேசில் அதிபருக்கு கொரோனா உறுதி
x
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஊரடங்கு நடவடிக்கைக்கு தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தவர், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனா. ஊரடங்கு அறிவித்த அந்நாட்டு மாகாண ஆளுநர்களையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். இதுபோல, கொரோனா அச்சம் இன்றி முக கவசம் அணியாமல் அவர் வலம் வந்ததால், சமீபத்தில் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவரை கண்டித்த‌து. இந்த நிலையில், அவருக்கு திடீரென 100 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக காய்ச்சல் ஏற்பட்டதால், அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னரும் தான் நலமுடன் இருப்பதாக அவர் கூறி வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்