100 நாள் ஊரடங்கிற்கு பிறகு திறக்கப்பட்ட சலூன்கள் - நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 100 நாள் ஊரடங்கிற்கு பிறகு, முதல்முறையாக சலூன்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 100 நாள் ஊரடங்கிற்கு பிறகு, முதல்முறையாக சலூன்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன. இதனையடுத்து நூற்றுக்கணக்கானோர், சலூன் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. சலூன் கடைகளின் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, செய்து, முக கவசம், சமூக விலகல் உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் தங்களது பணியை மேற்கொண்டனர். முடி திருத்த ஆயிரம் டாலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story