அமெரிக்காவில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் - 70 வயது முதியவரை கீழே தள்ளி விட்ட போலீஸ் அதிகாரி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முதியவர் ஒருவரை போலீசார் கீழே தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பின நபர் ஜார்ஜ் ஃப்ளோயிட் கொல்லப்பட்டதை கண்டித்து அமெரிக்காவின் பல்வேறு இடங்களில், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போலீசாரின் நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. நியூயார்க்கில் நேற்ற நடைபெற்ற போராட்டத்தின் போது, 70 வயது நபரை, போலீசார் கீழே தள்ளி விட்டுள்ளனர். அவர் கீழே விழுந்ததில் மண்டை உடைந்த நிலையில், போலீசார் அவரை கண்டும் காணாமல் அந்த இடத்தை விட்டு நகர்கின்றனர். இந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story