கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.
கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா
x
அமெரிக்காவில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீஸ் பிடியில் கொல்லப்பட்டதால், கருப்பின மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் அருகே உள்ள காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது. காந்தி சிலையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்க அரசு, இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்