ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு
அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் தொலைபேசி மூலம் பேசினர்.
அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் தொலைபேசி மூலம் பேசினர். அப்போது, அமெரிக்காவின் உள்நாட்டு இடையூறுகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கை, இந்தியா - சீனா எல்லை பகுதி நிலைமை மற்றும் உலக சுகாதார அமைப்பில் சீர்திருத்தம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் தங்களின் கருத்துகளை பரிமாறி கொண்டனர்.
Next Story