கருப்பின நபரின் மரணத்திற்கு நியாயம் கோரி போராட்டம் : ராணுவம் தயார்நிலையில் இருக்க டிரம்ப் உத்தரவு

கருப்பின நபர் ஃப்ளோயிட் என்பவரின், மரணத்திற்கு நியாயம் வழங்க கோரி அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டம், 25 நகரங்களுக்கு பரவியது.
கருப்பின நபரின் மரணத்திற்கு நியாயம் கோரி போராட்டம் : ராணுவம் தயார்நிலையில் இருக்க டிரம்ப் உத்தரவு
x
அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட கருப்பின நபருக்கு ஆதரவாக நியூயார்க் முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் வரை முக்கியமான 25 நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான நகரங்களில் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்தது. போலீஸ் வாகனங்கள், கட்டிடங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரங்களை கட்டுப்படுத்த இந்த நகரங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1992 ஆம் ஆண்டுக்கு பிறகு, முதன் முறையாக தேசிய பாதுகாப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.  இதனிடையே உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 4 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் ராணுவம்  தயார் நிலையில் இருக்கவும் அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். 
 


Next Story

மேலும் செய்திகள்