கொரோனாவிற்கு பின் புதிய வகையில் அமைக்கப்பட்ட திரையரங்கு...
கொரோனா தாக்கத்திற்கு பின் ஜெர்மன் நாட்டில்,உள்ள ஒரு பிரபல திரையரங்கம் புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தாக்கத்திற்கு பின் ஜெர்மன் நாட்டில்,உள்ள ஒரு பிரபல திரையரங்கம் புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அங்குள்ள திரையரங்கங்கள் இயங்கவில்லை. வரும் ஜீலை 31ம் தேதி வரை இயங்காது என அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பெர்லின் நகரில் உள்ள ஒரு திரையரங்கத்தை சமூக இடைவெளியுடன் அமர்ந்து படம் பார்க்கும் வகையில் மாற்றியுள்ளது அதன் நிர்வாகம். இதை சமூக ஊடகங்களில் பார்த்த மக்கள் ஆகஸ்ட் மாதத்திற்கு இப்போதே முன்பதிவு செய்ய துவங்கிவிட்டனர்.
Next Story