மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு : பிரிட்டனிடம் அரசியல் தஞ்சம் கோர மல்லையா திட்டம்

தொழிலதிபர் விஜய் மல்லையா பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு : பிரிட்டனிடம் அரசியல் தஞ்சம் கோர மல்லையா திட்டம்
x
தொழிலதிபர் விஜய் மல்லையா பிரிட்டனிடம் அரசியல் அடைக்கலம் கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வங்கிகளில் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் மோசடி செய்த  தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு  கொண்டு வருவதற்கான வழக்கு பிரிட்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னதாக, மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதை எதிர்த்து  மல்லையா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் அரசியல் தஞ்சம் கோர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஏற்கெனவே பிரிட்டன் உள்துறை செயலாளர் பிரீத்தி பட்டேலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்