கொரோனா : "2-வது ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்" - உலக சுகாதாரத்துறை நிறுவனம் எச்சரிக்கை

கொரோனாவின் இரண்டாம் கட்ட ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என சர்வதேச நாடுகளுக்கு உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா : 2-வது ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் - உலக சுகாதாரத்துறை நிறுவனம் எச்சரிக்கை
x
கொரோனா தொற்றின் முதல் கட்ட ஆட்ட பாதிப்பு சற்று தணிந்துள்ளது. இதை தொடர்ந்து, பெரும்பாலான உலக நாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு நிலை திரும்பி வருகிறார்கள். இந்நிலையில், கொரோனாவின் 2ஆம் கட்ட ஆட்டத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 2ஆம் கட்ட கொரோனா ஆட்டத்தில் எந்த நேரத்திலும் தொற்று பாதிப்பு மிக மிக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகள், தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும் என உலக சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.  முதல் கட்ட தொற்று பாதிப்பில் இருந்து இன்னும் முழுவதுமாக மீள முடியாத சூழலில், உலக சுகாதாரத்துறையின் இந்த எச்சரிக்கை, சர்வதேச நாடுகளை கலக்கம் அடைய செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்